Monday, March 8, 2021

தமிழக காவல் துறையில் மாற்றான் தாயின் பிள்ளைகள்.

தமிழக காவல் துறையில் மாற்றான் தாயின் பிள்ளைகள்.

 

தமிழக காவல் துறை மூன்று கேட்டகிரியாக இருப்பது உங்களைக்குத் தெறிந்திருக்கும். இதில் கேட்டகிரி இரண்டுதான் (Armed Reserve Police) இந்த கேட்டகிரி இரண்டுக்கு அந்தந்த மாவட்டித்தின் காவல் காண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ளது.  அவர்களுக்கென்று DIG, IG, ADGP,  மற்றும் DGP  கள் கிடையாது. இந்தக் காவலர்களின் அமிகாரிகளின் குடும்ப நலன் விசாரிக்க இது போன்ற மேல் அதிகாரிகள் இவர்களுக்கென்று தனியாகக்கிடையாது. ஆனால் இங்குள்ள காவலர்கள்தான்  மேல் அதிகாரிகளின் வீட்டு வேலை செய்ய ஆர்டர்லியாக உள்ளார்கள். இந்தப் பிரிவின் அலுவல்களோ மிகவும் கடினமானது.  அவை கைதிகள் வழிக்காவல், பணப்பறிமாற்றப்பாதுகாப்பு அலுவல். மந்திரிகளின் எஸ்கார்ட் அலுவல், எல்லாவிதமான காப்பு அலுவல்கள், மாவட்டித்தில் ஏற்படும் அனைத்துப் பொதுக்கூட்ட்ப் பாதுகாப்பு அலுவல். சட்டவிரோதமான கூட்டத்தைக் கலைக்கும் அலுவல். மேலும் மற்ற மாவட்டித்தில் தேவைப்படும் பாதுகாவல் அலுவலாகவும் அனுப்ப ப்படுவராகள்.

 

இந்தப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சொந்த த்தாயின் பிள்ளைகள் போன்று பாவிக்காமல் மாற்றான் தாயின்  பிள்ளைகள் போன்று பாவிக்கிறார்கள். கேட்டகிரி ஒன்றில் யாராவது தவறு செய்தால் அவர்களை கேட்டகிரி இரண்டிற்கு மாற்றப்படுகிறார்கள். இது அவர்களுக்கு  ஒரு சிறை தண்டனை போலும். 

 

தமிழக காவல் துறை வெள்ளைக்காரன் காலத்திலிருந்து மாற்றங்கள் எதுவம் செய்யப்படவில்லை ஏதாவுது ஒரு அரசு முன் வந்து  காவல் துறையை அடிப்படையிலிருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும். காவலர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி அளித்து எங்கு வேண்டுமானாலும் மாற்றப்படவேண்டும். மாறுதலுக்கு ஒரு கால அவகாசம் அளிக்கலாம். எல்லோரொக்கும் ஒரே தலைவர் அமைய வேண்டும். காவல் துறைக்கு ஒரு மறுமலர்ச்சி வருமா காத்திருப்போம்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Thursday, March 4, 2021

Thilagavathi IPS | திலகவதி ஐ.பி.எஸ் பேட்டி

 

திலகவதி  ஐ.பி.எஸ் அவர்களின் பேட்டி.

 https://youtu.be/P4SPgo3I9zM

Wednesday, March 3, 2021

தமிழக காவல் துறையில் அத்துறைத் தலைவராலேயே ஒரு தலை குனிவு.

தமிழக காவல் துறையில் அத்துறைத் தலைவராலேயே ஒரு தலை குனிவு.

 

Officials murmuring 
The Superintendent of Police,D. Kannan Chengalpattu District.  He was former SP, Special Branch. 

The victim SP woman IPS officer after visiting her headquarters was fumingly returning to Chennai to file a sexual harassment complaint with Home Secretary at Chennai against former Special DGP Rajesh Das.  D.Kannan, in his capacity as SP, Chengalpattu, intercepted the official vehicle of the victim woman officer with his Striking Force.   

He directed the striking force personnel to remove the keys of victim officer’s official car.   He then told the victim officer  that she should not file a complaint against Rajesh Das.  When the officer refused, Kannan insisted that at least the victim should talk to Rajesh Das over phone before proceeding to file a complaint. 

The victim officer told D.Kannan, that she would record this incident also that D.Kannan threatened her on behalf of Rajesh Das, Kannan handed over the vehicle key & withdrew. 

The act of the said D.Kannan as a mercenary to the sexual prowl Rajesh Das is more serious than the act of Rajesh Das.  

*Rajesh Das had begged before the en route SPs of Kallakurichi district and Villupuram district to stop the victim SP from proceeding towards Chennai. But both the SPs refused to oblige and obey this illegal instruction. Finally, SP Kannan promptly obliged Rajesh Das and scripted a dark chapter in the Police criminal history.*

The Committee formed to probe the sexual harassment complaint against Rajesh Das should also probe the role of D.Kannan, SP, Chengalpattu

 

Saturday, August 24, 2019

என் உயர் அதிகாரியாக இருந்தவரது பேட்டி.

என் உயர் அதிகாரியாக இருந்தவரது பேட்டி.


Wednesday, February 27, 2019

Tuesday, November 27, 2018

Sunday, September 16, 2018

சிலைத்திருட்டை ஒழிக்க வந்த பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ்.


சிலைத்திருட்டை ஒழிக்க வந்த பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ்.


அவர் எஸ்.பியாக இருந்தபோது நடந்த சம்பவம் இது...

ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வருகிறது...சம்பவ இடத்துக்கு விரைகிறார் எஸ்.பி... பெண் உடல் அறையின் நடுவில் எரிந்துகிடக்கிறது... உடலை அகற்றும்போது உற்றுக்கவனித்த அவர் அந்தப்பெண்ணின் கணவனை கைது செய்ய உத்தரவிடுகிறார்... விசாரணையில் தன் மனைவியை தானே எரித்துகொன்றதை கணவன் ஒத்துக்கொள்கிறான்...

எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று நிருபர்கள் கேட்கிறார்கள்,...அந்தப்பெண்ணின் உடலை திருப்பிப்பார்த்தபோது பின்பக்கம் மட்டும் முழுமையாக எரிந்திருந்தது...முன்பக்கம் எந்த பாதிப்பும் இல்லை... தானே தீ வைத்துக்கொண்டால் உடம்பு முழுக்க தீக்காயங்கள் இருக்கும்... பின்பக்கம் மட்டும் எரிந்திருப்பதால் கொலைசெய்து , அதன்பின்பு தீ வைத்தது உறுதியானது என்றார் எஸ்.பி...

கைது செய்ததோடு மட்டுமல்லாமல் , அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தான் ரயில்வே ஐ.ஜி யாக இருந்தபோதும் , தானாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி , கூண்டேறி சாட்சியம் அளித்தார்... அந்த கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது...

அவர்தான் பொன். மாணிக்கவேல் ஐ.பி.எஸ்...

'பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல!' என்ற டயலாக் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேலுக்குப் பொருந்தும்! தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் எஸ்.பி-யாக இருந்தபோது, இவரது அதிரடிகளுக்கு அளவே இல்லை. இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல அதிகாரிகள் இடமாற்றம் வாங்கி ஓடியது உண்டு , . இதில் ஓமலூர் டி.எஸ்.பி மணிரத்தினம் ரொம்பவே நொந்து போய் வீட்டை விட்டு ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தலைமறைவாகக் கண்ணாமூச்சி காட்டிய கதை உங்களுக்கு நினைவிருக்கலாம்...

இவரது அதிரடியான ஆக் ஷன் எல்லாம் போலீஸ் அதிகாரிகளுக்குத்தான்... ஆதரவு இல்லாத பொது மக்களுக்கோ இவர் எப்போதுமே கைகொடுக்கும் செல்லம் இந்த பொன்.மாணிக்கவேல்...
சென்னை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தபோது, கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த இரண்டுகாவலர்களை, தெருவில் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து செமத்தியாக மொத்தி எடுத்துப் பரபரப்பூட்டியவர் பொன்.மாணிக்கவேல். அவரது அதிரடியான நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர், ஆனால் காவல்துறையினர் அவருக்கு எதிரிகளாகமாறினர்.
இதனால் செங்கல்பட்டு கிழக்கிலிருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டார் பொன். மாணிக்கவேல். அங்கும் அவரது அதிரடியான ஆக்ஸன் தொடர்ந்ததால், கள்ளச்சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர்பீதியடைந்தனர். .

இந்தசம்பவத்திற்குப் பிறகு கோவைக்கு மாற்றப்பட்டார் பொன்.மாணிக்கவேல்.கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் பிரியாத சமயம் அது... ரூரல் எஸ்.பியாக பதவியேற்றார்... திருப்பூர் சட்டம் ஒழுங்கின் பொற்காலம் அது...காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கும் மக்களை உட்காரவைத்தே பேசவேண்டும் என்று உத்தரவிட்டார்...எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும் நாற்காலிகள் போடப்பட்டன...தன் தொலைபேசி எண்ணை பேப்பரில் வெளியிட்டு பொதுமக்கள் எந்நேரமும் தன்னை அழைக்கலாம் என்று தெரிவித்தார்...எப்போது பார்த்தாலும் மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ரோந்துப்பணியிலேயே இருப்பார்... கோவை புறநகர் மாவட்ட‌த்தில் குற்றச்சம்பவங்கள் மிக குறைவாக நடந்த காலம் அது...திருப்பூரில் சிக்னலில் நிற்கும் காவலர்கள் முழு யூனிபார்மில் [ கையுறை , ரிப்ளெக்டர்கள் உட்பட..] நிற்பதை முதலும் , கடைசியுமாக நான் பார்த்தது அப்போதுதான்...

நல்லது நடந்தால்தான் ஊழல்வாதிகளுக்கு பொறுக்காதே...? அவருக்கு சக காவல்துறையினர் ரூபத்தில் பிரச்சினை உருவானது. பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகளைக்கண்டு அரண்டு போன கோவை சக அதிகாரிகள் அவருக்கு எதிராக மேலிடத்தில் புகார் மேல் புகாராக அனுப்பிவந்தனர். இதனால் பொன்.மாணிக்கவேலை சற்று ஆறப் போடும் விதமாக, அவரைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் தள்ளியது தமிழக அரசு... பின்னர் மதுவிலக்குப்பிரிவில் பணியமர்த்தப்பட்டார்... மிக விரைவில் அங்கிருந்தும் மாற்றப்பட்டு தற்போது ரயில்வே பாதுகாப்புப்பிரிவின் ஐ.ஜியாக இருக்கிறார்...

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவின் கூடுதல் ஐ. ஜியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இவர் , பலகாலமாக ஹிந்து சமய அறநிலயத்துறை என்ற பெயரில் செயல்படும் சிலைதிருடும் கும்பலை அம்பலப்படுத்தியுள்ளார்... எத்தனை லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள தமிழக கலைச்செல்வங்கள் கொள்ளை போயுள்ளன என்பதுஇவர் அந்தப்பதவிக்கு வந்தபின்பே தெரியவந்துள்ளது...

இவரைப்போன்ற நேர்மையும் திறமையும் உள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டால் இந்த மாநிலத்துக்கே நல்லது...ஆனால் கழகங்களுக்குத்தான் நேர்மை , திறமை என்றாலே அலர்ஜி ஆச்சே? எனவே கூடிய விரைவில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவில் இருந்தும் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்...

எது எப்படியாயினும் தமிழகத்தில் பலகாலமாக அரசியல்வாதிகள் - அதிகாரிகள் இடையேயான கள்ளக்கூட்டணியையும் , அதனால் கொள்ளைபோன விலைமதிப்பற்ற செல்வங்கள் பற்றிய விபரங்களையும் வெளிக்கொண்டுவந்துள்ளார்...

வணங்குகிறோம் ஐயா... தாங்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

#Pon #Manickkavel #பொன். #மாணிக்கவேல் ஐ.பி.எஸ்...